ஜோதிபா புலேவுடன் மந்திரி சந்திரகாந்த் பாட்டீலை ஒப்பிட்டு பேசிய பா.ஜனதா பெண் தலைவர்

மந்திரி சந்திரகாந்த் பாட்டீலை, சமூக சீர்திருத்தவாதி ஜோதிபா புலேவுடன் பா.ஜனதா பெண் தலைவர் சித்ரா வாக் ஒப்பிட்டு பேசி உள்ளார்.

Update: 2023-01-30 18:45 GMT

மும்பை, 

மந்திரி சந்திரகாந்த் பாட்டீலை, சமூக சீர்திருத்தவாதி ஜோதிபா புலேவுடன் பா.ஜனதா பெண் தலைவர் சித்ரா வாக் ஒப்பிட்டு பேசி உள்ளார்.

ஜோதிபா புலேவுடன் ஒப்பீடு

புனேயில் நடந்த பா.ஜனதா கூட்டத்தில் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், மாநில மகளிரணி தலைவி சித்ரா வாக், அந்த பகுதி கட்சி பிரமுகர் ஹேமந்த் ராஸ்னே உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சித்ராவாக் பேசுகையில், " வீடுகளில் நாம் சாவித்ரிபாய்களை காண முடியும். ஆனால் சந்திரகாந்த் பாட்டீல், ஹேமந்த் ராஸ்னே போன்ற ஜோதிபா புலேக்களை காண்பது மிகவும் அரிது " என்றார்.

சர்ச்சையில் சிக்கியவர்

ஜோதிபா புலே சமூக சீர்திருத்தவாதி. அவரது மனைவியான சாவித்ரிபாய் புலேவும் பெண் உரிமை, கல்விக்காக பாடுபட்டவர் ஆவார்.

சமீபத்தில் சந்திரகாந்த் பாட்டீல் அம்பேத்கர், ஜோதிபா புலே போன்றவர்கள் பிச்சை எடுத்து பள்ளிக்கூடங்களை கட்டினார்கள் என பேசி சர்ச்சையில் சிக்கினார்.

இந்தநிலையில் பா.ஜனதா பெண் தலைவர் சந்திரகாந்த் பாட்டீலை, ஜோதிபா புலேவுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்