அகோலாவில் திடீர் நிலநடுக்கம்

அகோலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவானது.

Update: 2022-06-12 17:21 GMT

அகோலா, 

அகாலோவில் இருந்து 21 கி.மீ. தொலைவில் நேற்று மாலை 5.41 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பற்றி அறிந்த வானிலை ஆய்வு மையத்தின் புவியியல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில் ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவானது தெரியவந்தது.

இந்த நிலநடுக்கத்தால் யாரும் காயமடையவில்லை என்றும், சொத்து சேதம் ஏதும் ஏற்படவில்லை என மாவட்ட துணை கலெக்டர் சஞ்சய் காட்சே தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்