மகாட் தொழிற்சாலையில் பயங்கர தீ

Update: 2023-02-08 18:45 GMT

ராய்காட், 

ராய்காட் மாவட்டம் மகாட் எம்.ஐ.டி.சி பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று காலை 10.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் அங்கிருந்த பொருட்கள் தீயின் வெப்பம் காரணமாக வெடித்து சிதறியது. கரும்புகையுடன் தீ பற்றி எரிவதை கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் 10 வாகனங்களில் அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை எனவும், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்