பண்டாராவில் புலி தாக்கி விவசாயி பலி

பண்டாராவில் புலி தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2022-10-01 18:45 GMT

கோண்டியா, 

பண்டரா மாவட்டம் லக்கந்தர் தாலுகுா கான்ஹால் காவ் பகுதியை சேர்ந்தவர் தேஜ்ராம் (வயது40). விவசாயியான இவர் நேற்று முன்தினம் காலை 9.30 மணி அளவில் தனது வயலுக்கு சென்றார். அப்போது புதர்களில் பதுங்கி இருந்த புலி ஒன்று அவர் மீது பாய்ந்து தாக்கியது. இந்த சம்பவத்தில் தேஜ்ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் அவரது வயலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே கடந்த 21-ந் தேதி நபர் ஒருவரை புலி தாக்கி கொன்ற சம்பவத்தை தொடர்ந்து புலியை பிடிக்க அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நடமாட்டத்தை கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்