பவாயில் கள்ளக்காதலனை கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது

பவாயில் கள்ளக்காதலனை கழுத்தை நெரித்து கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-28 12:38 GMT

மும்பை,

பவாயில் கள்ளக்காதலனை கழுத்தை நெரித்து கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சரண் அடைந்த பெண்

மும்பை கோரேகாவ் ஆரேகாலனி பகுதியில் உள்ள கோவில் அருகே நின்றிருந்த ஆட்டோவில் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான நபர் யார்? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பவாயை சேர்ந்த ரம்ஜான் கான் என்பது தெரியவந்தது.

இதற்கிடையில் பவாய் போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் சரண் அடைந்தார்.

கள்ளக்காதல்

அவர் பவாயை சேர்ந்த ஜோக்ரா ஷா(வயது30) என்பதும், ஆட்டோ டிரைவரான ரம்ஜான் கானை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்தார். இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் கொலையுண்ட ரம்ஜான் கானிற்கும், போலீசில் சரண் அடைந்த ஜோக்ரா ஷாவிற்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரம் அடைந்த ஜோக்ரா ஷா, ரம்ஜான் கானை கொலை செய்து அவரது ஆட்டோவிலேயே உடலை போட்டுச்சென்றதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் ஜோக்ரா ஷாவை கைது செய்து, கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்