சந்திராப்பூரில் புலி தாக்கி பெண் பலி

சந்திராப்பூர் மாவட்டம் பிரம்மாபுரி தாலுகா அவால்காவ் கிராமத்தில் புலி தாக்கி பெண் பலி

Update: 2022-09-28 19:30 GMT

சந்திராப்பூர்,

சந்திராப்பூர் மாவட்டம் பிரம்மாபுரி தாலுகா அவால்காவ் கிராமத்தை சேர்ந்த பெண் திருபாடா மோகுருல்லே (வயது55). இவர் நேற்று முன்தினம் பண்ணை வீட்டிற்கு செல்ல காட்டுப்பாதை வழியாக சென்றார். அப்போது, புதர் மறைவில் பதுங்கி இருந்த புலி ஒன்று பெண்ணின் மீது பாய்ந்து தாக்கியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலை புலி பாதி தின்றுவிட்டு அங்கேயே போட்டு சென்றது. இதற்கிடையே காணாமல் போன பெண்ணை தேடி வனத்துறையினர் காட்டிற்குள் சென்றனர்.

1138 வனச்சரகம் பகுதியில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் புலியின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்