காரில் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது

தானே மாநகராட்சி தலைமை அலுவலகம் அருகே காரில் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-05 18:45 GMT

தானே, 

தானே மாநகராட்சி தலைமை அலுவலகம் அருகே காரில் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காரில் உல்லாசம்

தானே மாநகராட்சி தலைமை அலுவலகம் அருகே கடந்த 3-ந்தேதி இரவு கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் அந்த காரில் இருந்து முனகல் சத்தம் கேட்டது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் கூர்ந்து கவனித்த போது, ஆண் ஒருவர் காரின் பின்புற இருக்கையில் ஒரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் சமூகவலைத்தளத்தில் பரவினர். இது பற்றி தகவல் அறிந்த நவ்பாடா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

வாலிபர் கைது

காரில் உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்த 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். போலீசார் விசாரணையில் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர் ரோமில் கிம்ஜி சேடா (வயது35) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவருடன் இருந்த பெண்ணை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மாநகராட்சி தலைமை அலுவலகம் அருகே காரில் உல்லாசம் அனுபவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்