டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் காலிறுதி; சிந்து தோல்வி
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்துள்ளார்.
ஒடென்ஸ்,
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் அந்நாட்டின் ஒடென்ஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் போட்டி காலிறுதியில் பி.வி. சிந்து, தென்கொரியாவின் சியோங் உடன் விளையாடினார்.
இந்த போட்டியில் 11-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து சிந்து வெளியேறியுள்ளார். இதனால் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்துள்ளது.