மூன்றாவது காலாண்டில் என்.டி.பி.சி. லாபம் 23 சதவீதம் உயர்ந்தது

என்.டி.பி.சி. நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ரூ.3,198 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது.

Update: 2020-02-11 10:57 GMT
சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.2,608 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 23 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 0.30 சதவீதம் குறைந்து ரூ.25,412 கோடியாக இருக்கிறது. மொத்த லாபம் (ரூ.6,902 கோடியில் இருந்து) ரூ.7,593 கோடியாக உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது என்.டி.பி.சி. நிறுவனப் பங்கு ரூ.116.45-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே குறைந்தபட்சமாக ரூ.112.15-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.113.45-ல் நிலைகொண்டது. இது, சென்ற வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 1.94 சதவீத சரிவாகும். 

மேலும் செய்திகள்