உலக சாரணர் தினம்
ஆகஸ்டு 1-ந் தேதி உலக சாரணர் தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் இந்த தினம் ஜூலை மாத இறுதி வாரமும், ஆகஸ்டு முதலாம் வாரமும் கடைப்பிடிக்கப்படுகிறது.;
"சாரண இயக்கத்தின் தந்தை' என அழைக்கப்படும், ராபர்ட் பேடன் பவல் பிரபு (Robert Baden—Powell) என்பவரால் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
ஜாதி, மத வேற்றுமை கடந்து சகோதர மனப் பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டை மாணவர்களுக்குக் கற்றுத் தருவது சாரண இயக்கத்தின் செயல்பாடாகும். சாலை விதிமுறைகளை மேற்கொள்ளுதல், மரங்களை நடுதல், விழா நடைபெறும்காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துதல்,சமூக உறவுக்கு பாலமாக செயல்படுதல் போன்ற பணியினை சாரணர் இயக்கத்தினர் செய்கிறார்கள்.
"எதற்கும் தயாராக இரு!" என்னும் பொருளைக் கொண்டசாரணிய இயக்கத்தை உருவாக்கிய பிதாவாகக் கருதப்படும் பேடன் பவல், 1857-ம் ஆண்டு பிறந்தார். இளம் வயதில் ராணுவத்தில் இணைந்து கொண்ட பேடன் பவல் இந்தியா, கனடா, தென்னாப்
பிரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரிந்தார். 1907-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பணிபுரிந்தபோது இளைஞர்களுக்கான சாரணர் இயக்கத்தைஆரம்பித்தார்.
இவர் சிறுவர்களுக்கான சாரணியம் (Scouting for Boys) என்ற நூலை வெளியிட்டார்.
1910-ல் சாரணியம் உலகெங்கும் பரவத் தொடங்கியது. இன்று எதிர்காலச் சமூகத்திற்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இந்த அமைப்பு செயல்படுகிறது. இவரை, இங்கிலாந்தின் மன்னர், 'கில்வெல் பிரபு' எனப் பெயர் சூட்டி, பாராட்டிக் கவுரவித்தார்.
1941-ம் ஆண்டு பேடன் பவல் இறந்தார். இன்று உலகில் பெருமளவு நாடுகளில் பலகோடி சாரணர் இயக்கங்கள் உருவாகி, பேடன் பவலின் தொலை நோக்கை நிறைவேற்றி வருகின்றன. சாரணிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட பலர் இன்று உலகில் பல துறைகளிலும் பெயர் பதித்திருப்பதைக் காணலாம். உதாரணமாக, முதன்முதலாக சந்திரனில் காலடியெடுத்து வைத்த நீல்ஆம்ஸ்டிராங் ஓர் சாரண இயக்கத் தொண்டரே. உலகப்புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதிபதிகள் வரிசையில் இடம்பிடித்த பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் போன்றோர்களும் சாரணர்களே.