உடல்நல குறைவால் கர்ப்பிணி திடீர் சாவு

உடல்நல குறைவால் கர்ப்பிணி திடீரென உயிரிழந்தார்.

Update: 2023-01-24 19:00 GMT

கரூர் அருகே உள்ள சின்னகோதூரை சேர்ந்தவர் ரவீந்திரகுமார்(வயது 27). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பூஜாகுமாரி(25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், பூஜாகுமாரி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் பூஜாகுமாரிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மற்றும் கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூஜாகுமாரியின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்