12 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

Update: 2023-01-02 19:30 GMT

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 279 மனுக்கள் வரப்பெற்றன. பின்னர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி விசாரணை நடத்தி தீர்வு காணுமாறு கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார். கலெக்டர் அலுவலக தரைதளத்தில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் கார்மேகம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். பின்னர் அவர் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 4 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர நாற்காலிகள், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பில் ஊன்றுகோல் மற்றும் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.34 ஆயிரம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் என மொத்தம் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.61 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகன் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்