சிவகங்கை மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு

சிவகங்கை மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-10-21 03:34 GMT

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் வரும் 27-ம் தேதியன்று தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்களான மருது சகோதரர்களின் குருபூஜையும் , 30-ம் தேதியன்று முத்துராமலிங்க தேவரின் குருபூஜையும் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் ஆயிசா அஜித் அறிவித்துள்ளார். இதற்காக சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்