17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் வாலிபர் கைது

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.;

Update:2022-09-01 02:44 IST

கடத்தூர்

கோபி அருகே உள்ள பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 20). தொழிலாளி. இவர் கோபி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.இதுகுறித்து ஈரோடு சைல்டு லைன் ஆலோசகர் தீபக் குமார் என்பவர் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சஞ்சயை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்