வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

வேலூரில் வாலிபரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-18 17:10 GMT

வேலூர் மக்கான் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 33). இவர், வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் திடீரென கத்தி காட்டி மிரட்டி சூர்யாவின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தியதில், கொணவட்டத்தை சேர்ந்த முனீர் (வயது 32), முள்ளிபாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (25), கருகம்புத்தூரை சேர்ந்த நரேஷ் (35) என்பது தெரியவந்தது. இதில் தமிழ்செல்வன் அரக்கோணம் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் போலீசார் முனீர் மற்றும் நரேஷை நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 3 பேருக்கும் கோழிப்பண்னை அதிபர் கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ளது. அவர்களை தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேல் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்