கஞ்சா விற்ற 2 பேர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-01 11:25 GMT

தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபி சுஜின் ஜோஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தூத்துக்குடி பொன்னகரம் பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்த தூத்துக்குடி சாமுவேல்புரத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் கோபிகண்ணன் (வயது 32), முள்ளக்காட்டை சேர்ந்த பால்சாமி மகன் சுடலைமாடசாமி (29) ஆகிய 2 பேரை கையும் களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்