பெண் உள்பட 2 பேர் மாயம்

பெண் உள்பட 2 பேர் மாயம் ஆகினர்.

Update: 2022-07-13 18:59 GMT

வெள்ளியணை வடக்கு பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் தீபா (வயது 22). இவர் கடந்த 11-ந்தேதி பிள்ளபாளையத்தில் உள்ள அக்கா வீட்டுக்கு திருவிழா நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர் அன்றிலிருந்து தீபாவை காணவில்ைல. இதையடுத்து பெற்றோர் உறவினர், நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து தீபாவின் தாய் தெய்வானை லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளபாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மகன் நரேஷ் குமார் (19). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று நரேஷ்குமார் அதே பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்ைல. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நரேஷ்குமாரின் தாய் ஜோதிமணி கொடுத்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்