சென்னையில் நடந்த கொலை வழக்கில் 2 வாலிபர்கள் மதுரை கோர்ட்டில் சரண்

சென்னையில் நடந்த கொலை வழக்கில் 2 வாலிபர்கள் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2023-07-14 20:32 GMT


சென்னை திருமங்கலம் பாடிக்குப்பம் காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் சையது சிக்கந்தர் (வயது 38). பொதுமக்கள் பலர் சையது சிக்கந்தரிடம் தாயத்து, கயிறு உள்ளிட்டவைகளை கட்டி வந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய புருஷோத்தமன் (வயது 24), வெங்கடேஷ் என்ற விக்கி (23) ஆகியோர் நேற்று மதுரை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு கல்யாணமாரிமுத்து உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்