ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Update: 2016-12-15 19:00 GMT
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 400–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி கப்பல்களில் ரோந்து வந்தனர். அவர்கள், ராமேசுவரம் மீனவர்களை மிரட்டி அங்கிருந்து விரட்டியடித்தனர். அப்போது இலங்கை கடற்படையினர், ஒருசில விசைப்படகுகளை சுற்றிவளைத்து பிடித்து அவற்றில் இறங்கி மீனவர்களை தாக்கியதுடன், மீன்பிடி சாதனங்கள், வலைகளை சேதப்படுத்தினார்கள்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், மீன்பிடிப்பதை கைவிட்டு பாதியிலேயே கரை திரும்பினர். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படை தாக்குதல் சம்பவம் குறித்து மீனவர்கள் யாரும் மீன்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யவில்லை.

மேலும் செய்திகள்