ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது ஏன்? மு.க.ஸ்டாலின் பேட்டி

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு நேற்று மாலை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

Update: 2017-01-19 21:31 GMT

சென்னை,

மத்திய அரசின் தலைமை வக்கீல் ஜல்லிக்கட்டுக்கு மாநில அரசு அவசரச்சட்டம் கொண்டு வரும் அதிகாரம் உள்ளது என்று சொல்லி இருந்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன். எனவே மாநில அரசு உடனே அவசரச்சட்டம் கொண்டு வர வேண்டும்.

ஏற்கனவே நான் ‘சட்டமன்றத்தை கூட்டுங்கள், அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டி, ஒரு முடிவெடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முயற்சி செய்யுங்கள்’, என பலமுறை சொல்லியும், எந்த பதிலும் வரவில்லை. அதனால் தான் தி.மு.க. சார்பில் நாளை(இன்று) ரெயில் மறியல் போராட்டத்தை அறிவித்து இருக்கிறோம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்