சட்டசபை அமளி: கமல்ஹாசன் டுவிட்டரில் வேண்டுகோள்

எடப்பாடி கே.பழனிசாமி அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது.

Update: 2017-02-18 22:09 GMT
சென்னை,

அப்போது ஏற்பட்ட அமளி உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டார்.

ஒரு செய்தியில் அவர், “தமிழக மக்களே, உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்களை, அவர்களுக்கு அவர்களது வீடுகளில் எப்படி ஒரு வரவேற்பு கிடைக்குமோ அதே மாதிரி வரவேற்க வேண்டும்” என கூறி உள்ளார்.

இன்னொரு செய்தியில், “நீங்கள் யார் என்று காட்டி இருக்கிறீர்கள். நமக்கு மற்றொரு முதல்-அமைச்சர் கிடைத்துவிட்டதாக தெரிகிறது. வாழ்க கேலிக்கூத்து நாயகம்” என கிண்டல் செய்துள்ளார்.

மற்றொரு செய்தியில், “ Rajbhavantamilnadu@gmail.com -ங்கிற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலா அனுப்புங்க. மரியாதையா பேசணும். அது அசம்பளியில்ல. கவர்னர் வீடு” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்