அதிமுக தலைமை அலுவலகத்தை முடக்க நீதிமன்றம் தான் செல்ல வேண்டும் - தேர்தல் ஆணையம்

அதிமுக தலைமை அலுவலகத்தை முடக்க நீதிமன்றம்தான் செல்ல வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன.

Update: 2017-03-23 04:36 GMT
சென்னை, 

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எதிர்பால் கட்சியின் சின்னம் மற்றும் பெயரை பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. 

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பு பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்த பன்னீர்செல்வம் அணி திட்டமிட்டது. இரு அணியாக பிரிந்த பின்னர் அதிமுக ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்புதான் பயன்படுத்தி வந்தது. இப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் அதற்கு எதிர்ப்பு எழுந்து உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்தது. 

இதற்கிடையே அதிமுக தலைமை அலுவலகத்தை முடக்க நீதிமன்றம்தான் செல்ல வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன. சசிகலா தரப்பு அதிமுக தலைமை அலுவலகத்தை பயன்படுத்த கூடாது என்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவிக்கையில் அதிமுக தலைமை அலுவலகத்தை முடக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது, அதிமுக தலைமை அலுவலகத்தை முடக்க நீதிமன்றம்தான் செல்ல வேண்டும் என கூறிஉள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்