நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவு

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவடைந்தது.

Update: 2024-05-05 12:16 GMT

சென்னை,

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25-ம் கல்வியாண்டு மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெற்றது.

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 24 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் 1 லட்சத்து 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், நாடு முழுவதும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்துள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்