அடுத்த கைது அமைச்சர்கள் அதிரவைக்கும் எச்.ராஜா பேஸ்புக் பதிவு

டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 'அடுத்து, அ.தி.மு.க அமைச்சர்கள்' என்று அதிரவைத்துள்ளார், பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா.

Update: 2017-04-26 07:13 GMT


இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அ.தி. மு.க அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இது குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா, தனது பேஸ்புக் பக்கத்தில் தன் கருத்தைப் பதிவுசெய்துள்ளார். அதில், 'தினகரன் கைது. தமிழ்நாட்டில் இனி பல அரசியல் திருப்பங்கள் காத்திருக்கின்றன. தினகரன் நண்பர் மல்லிகார்ஜுனனும் கைது. அடுத்து, அ.தி.மு.க அமைச்சர்கள்? பொதுச்செயலாளர் பெங்களூரு சிறையில்!
துணைப் பொதுச்செயலாளர் திஹார் சிறையில்! அருமையான இயக்கம் அ.தி.மு.க!' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்