தாயும்,தந்தையும் இல்லாத கட்சியாக அதிமுக உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கம்

தாயும்,தந்தையும் இல்லாத கட்சியாக அதிமுக தற்போது உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Update: 2017-04-27 06:19 GMT
சென்னை


எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக ஜெயலலிதாவின் வழிகாட்டுதலால் சிறப்பாக செயல்பட்டது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தாய் தந்தையை இழந்து தவிப்பது போல தனித்துவிடப்பட்டுள்ளோம்.அ.திமு.,க இணைய வேண்டும் என இரு அணி தலைவர்களும் விரும்புகிறார்கள்.அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிமுக ஒன்றாக செயல்படும்.

கூட்டுறவு வங்கிகள் தனியார் வங்கிகளுக்கு இணையாக செயல்பட்டு வருகின்றன. ரூ 7 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்