நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா விவாகரத்து வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

நடிகர் ரஜினிகாந்தின் 2–வது மகள் சவுந்தர்யா. இவருக்கும், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

Update: 2017-06-24 22:15 GMT

சென்னை,

திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே சவுந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் இனி சேர்ந்து வாழமுடியாது என்று முடிவு செய்து, விவாகரத்து பெற முடிவு செய்தனர்.

இதற்காக, அவர்கள் சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி மரியா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சவுந்தர்யா, அஸ்வின் கோர்ட்டில் ஆஜராகி, பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக கூறினர். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை ஜூலை 4–ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்