உடல் நலக்குறைவால் ஓய்வில் இருக்கிறேன்; பத்திரிகையாளர்களை நாளை சந்திப்பேன்

டி.டி.வி.தினகரன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. அவருடைய ஆதரவாளர்கள் மட்டும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தனர்.

Update: 2017-08-21 22:15 GMT

சென்னை,

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், டி.டி.வி.தினகரன் நிலைப்பாடு என்ன என்பது குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் பத்திரிகையாளர்கள் நேற்று நீண்ட நேரம் காத்திருந்தனர்.

ஆனால் டி.டி.வி.தினகரன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. அவருடைய ஆதரவாளர்கள் மட்டும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தனர்.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களை நாளை சந்தித்து பேட்டி அளிக்க இருப்பதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘காய்ச்சல் மற்றும் தொண்டை வலி உள்ளதால், மருத்துவர் ஆலோசனைபடி ஓய்வில் இருக்கிறேன். 23–ந் தேதி (நாளை) உங்களை (பத்திரிகையாளர்கள்) சந்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்