விருதுநகர்: சாத்தூர் அருகே 2 குழந்தைகளை படுகொலை செய்த தந்தை தலைமறைவு

விருதுநகரில் சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் 2 குழந்தைகளை படுகொலை செய்த தந்தை தலைமறைவாகி உள்ளார்.

Update: 2018-04-22 03:41 GMT

விருதுநகர்,

விருதுநகரில் சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் வசித்து வந்தவர் அந்தோணிராஜ்.  இவரது மனைவி முனீஸ்வரி.  இந்த நிலையில் குடும்ப பிரச்னையால் கணவர் தனது 2 குழந்தைகளை படுகொலை செய்துள்ளார்.

அவர்கள் மகள் முத்துலட்சுமி, மகன் முனீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  தொடர்ந்து அந்தோணிராஜ், மனைவி முனீஸ்வரியையும் வெட்டியுள்ளார்.  இதில் அவர் படுகாயமடைந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.  இந்த நிலையில், 2 குழந்தைகளை படுகொலை செய்த தந்தை தலைமறைவாகி உள்ளார்.  தப்பியோடிய அந்தோணிராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்