சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையில் இருந்து இந்த ஆண்டு பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

Update: 2018-05-10 19:07 GMT
சென்னை, 

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையில் இருந்து இந்த ஆண்டு பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

அவர்களின் வேண்டுகோளை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையில் இருந்து 14.5.2018 முதல் 19.5.2018 வரை சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாயில் முறையே வினாடிக்கு 350 கனஅடி மற்றும் 220 கனஅடி வீதம் 5 நாட்களுக்கு கூடுதலாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்