கோதையாறு பாசன திட்ட அணைகளில் நீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
கோதையாறு பாசன திட்ட அணைகளில் நீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalanisamy
சென்னை,
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து வருகிற 9ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். 30 நாட்களுக்கு 75 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படும் எனவும் இதன் மூலம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் உள்ள 17 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.