நெல்லையில் வேன் கவிழ்ந்து விபத்து; ஓட்டுநர் உள்பட 2 பேர் பலி
நெல்லையில் வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர்.
நெல்லை,
நெல்லையில் கங்கை கொண்டான் அருகே சென்று கொண்டிருந்த வேன் ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் ஜெயபால் மற்றும் பார்வதி என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.