கேரள மக்களுக்கு உதவ பாஜக சார்பில் உதவி மையம் தமிழிசை சவுந்தராஜன் அறிவிப்பு
கேரள மக்களுக்கு உதவ பாஜக சார்பில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் அறிவித்துள்ளார். #KeralaFloods
சென்னை,
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பாஜக சார்பில், கோவையில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக தேவையான நிவாரண உதவிகளை திரட்டி அனுப்பி வைக்க, 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.