தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பிற கட்சியினரை விமர்சனம் செய்ய வைக்கிறது -தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பிற கட்சியினரை விமர்சனம் செய்ய வைக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். #TamilisaiSoundararajan

Update: 2018-09-19 05:41 GMT
சென்னை

தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
 
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பிற கட்சியினரை விமர்சனம் செய்ய வைக்கிறது. அரசியல் ரீதியாக தாம் வளரவில்லை என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கருதினால், அவரது தலைவர் மு.க.ஸ்டாலினும் வளரவில்லை என்பதே தமது கருத்து.

நேற்று நடைபெற்ற தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீர் கிடைக்க அனுமதி பெற்று தரப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்திற்கு என்ன திட்டங்களை கொண்டுவந்தது. பாஜகவின் வளர்ச்சி தமிழக அரசியல் கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டுவந்திருப்பதாகவும் தமிழிசை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்