எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளேன்- எடப்பாடி பழனிசாமி

எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Update: 2018-10-04 07:52 GMT
மதுரை

மதுரையில் அதிமுக நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலவர் ஓ. பன்னீர் செல்வம் பேட்டி அளித்தனர

எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

 மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி. எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளேன். பருவமழை முன்னெச்சரிக்கையாக 3 முறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் போன்ற நிலை திருப்பரங்குன்றத்தில் நடக்காது. 

தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்.. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்; கருத்து தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்