கனமழை காரணமாக நெல்லை , தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை காரணமாக நெல்லை , தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Update: 2018-10-05 01:44 GMT
சென்னை,

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், வரும் 7 ஆம் தேதி, மிக கனமழை பெய்யும் என்று தமிழகத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக  நெல்லை மற்றும் தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்