சென்னை,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்த போதும், சென்னையில் வெயில் அடித்தது. மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல், வானம் தெள்ளத்தெளிவாக காட்சி அளித்தது.
இதனால், மழை எப்போது பெய்யத்துவங்கும் என்று மக்கள் ஏக்கத்தோடு எதிர்பார்க்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், சென்னையில் இன்று காலை திடீரென வானிலை மாறியது. காலையில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்த நிலையில், பிற்பகல் அளவில் வெளுத்து வாங்கியது. கிண்டி, எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.