தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-11-06 09:50 GMT
சென்னை,

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி பெய்து வருகிறது. தற்போது அது வலுவடைந்து இருக்கிறது. இந்த நிலையில், 
அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மீனவர்கள் நாளை வரை குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும் செய்திகள்