டெங்கு காய்ச்சலுக்கு தற்போது வரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்: உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

டெங்கு காய்ச்சலுக்கு தற்போது வரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2018-11-12 06:34 GMT
மதுரை, 

டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை  கிளை, டெங்கு  பன்றிக்காய்ச்சலுக்கு தற்போது வரை எத்தனை பேர் உயிர் இழந்துள்ளனர் என்று கேள்வி எழுப்பியதோடு, டெங்கு, பன்றிக்காய்ச்சல்களை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையை வரும் 20- ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்