தென்காசி அருகே விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
தென்காசி அருகே நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ளனர்.
திருநெல்வேலி,
நெல்லை மாவட்டம், தென்காசி அருகே எல்லைப்புளி என்ற இடத்தில் இரண்டு சக்கரவாகனம் மீது கார் மோதியது. இதில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்த கணவன், மனைவி, 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.