எப்போதும் குறை சொல்லாமல் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

எப்போதும் குறை சொல்லாமல் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Update: 2018-11-23 04:05 GMT
சென்னை,

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:

முதல்-அமைச்சர் தனது சொந்த பிரச்சனைக்காக இல்லாமல் மக்கள் பிரச்சனைக்காகத்தான் ஹெலிகாப்டரை பயன்படுத்தினார். 

ஹெலிகாப்டரில் முதல்-அமைச்சர் சென்று பார்வையிட்டதால்தான், பாதிப்புகளை விரைந்து கணக்கிட்டு பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிந்தது.

எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக இருக்கக் கூடாது. எப்போதும் குறை சொல்லாமல் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.  

கஜா புயல் நிவாரணப்பணிகளில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஓரிரு நாளில் இயல்பு நிலை திரும்பி விடும்.

தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது. சுனாமி தாக்குதலை விட கஜா புயலால் ஏற்பட்ட சேதம் அதிகமாக உள்ளது. 

புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகத்திற்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்புவது, பிரதமர் தமிழகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது.

தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு அளிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்