மேகதாது அணை விவகாரம்; கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2018-11-27 09:50 GMT
சென்னை,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது.  இதனை அடுத்து மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயார் செய்தது.  இதற்காக மத்திய சுற்று சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தது.  இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய சுற்று சூழல் அமைச்சகத்தின் அனுமதி கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த வரைவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், இறுதி அறிக்கைக்கு கர்நாடகா ஒப்புதல் பெறுவதை தடுப்பதற்காக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்தது.

அதன்படி, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்