திண்டுக்கல்லில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதல்; 4 பேர் பலி
திண்டுக்கல்லில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் தாடிக்கொம்பு அருகே சாலையோரம் லாரி ஒன்று பழுதடைந்து நின்றிருந்தது. இந்த நிலையில் அந்த வழியே வந்த கார் ஒன்று திடீரென லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.