5 மாநில தேர்தல் முடிவு: கமல்ஹாசன் கருத்து ‘புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்’
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, 'புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
ராஜஸ்தான், மிசோரம், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், ‘‘புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.