’சாடிஸ்ட்’ மோடி என கூறிவரும் ஸ்டாலின் இனிமேல் ’சாடஸ்ட்’ ஸ்டாலின் என அழைக்கப்படுவார்; தமிழிசை சவுந்தரராஜன்
’சாடிஸ்ட்’ மோடி என கூறிவரும் ஸ்டாலின் இனிமேல் ’சாடஸ்ட்’ ஸ்டாலின் என அழைக்கப்படுவார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுடன் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இதில், நாடாளுமன்ற தேர்தலில் களப்பணியாற்றுவது பற்றி கட்சி நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார்.
இதன்பின் சென்னை அரும்பாக்கத்தில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்பொழுது, கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பிரதமர் இரங்கல் தெரிவிக்கவில்லை என தி.மு.க. தலைவர் கூறுவது தவறு.
சிறுபான்மை மக்களை பா.ஜ.க. மதிக்கிறது. ஆனால் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசுவதில்லை.
’சாடிஸ்ட்’ மோடி என கூறிவரும் மு.க. ஸ்டாலின் இனிமேல் ’சாடஸ்ட்’ ஸ்டாலின் என அழைக்கப்படுவார். தமிழகத்தில் இனிதான் பா.ஜ.க. விஸ்வரூபம் எடுக்க உள்ளது. நீங்களா, நாங்களா என பார்ப்போம் என்று கூறியுள்ளார்.