பெரியாரின் 45-வது நினைவு தினம் : திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை
தந்தை பெரியாரின் 45-வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் இருக்கும் அவரது திரு உருவப்படத்திற்கு மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரியாரின் 45-வது நினைவு தினத்தையொட்டி கி.வீரமணி தலைமையில் திராவிடர் கழகத்தினரும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
தமிழினம் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்ந்திட, சாதி - மத பேதமில்லா சமுதாயம் அமைந்திட தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பகுத்தறிவு பகலவனின் 45-வது நினைவு நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன்!
— M.K.Stalin (@mkstalin) December 24, 2018
இந்நாள் மட்டுமல்ல எந்நாளும் தந்தை பெரியாரின் இலட்சியச் சுடரை ஏந்திடுவோம்! pic.twitter.com/izQKJl1BhN
இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கங்களை எழுப்பினார்.