தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-18 14:29 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்