சென்னையில் ரோபோ டிராபிக்போலீஸ் அறிமுகம் : காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை சீராக்க ரோபோ டிராபிக்போலீஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
இந்தியாவிலேயே முதன்முறையாக சாலை போக்குவரத்தை சீராக்க ரோபோ டிராபிக்போலீஸ் சென்னை காவல்துறையினரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
சென்னையில் மாணவர்கள் சாலையை கடக்கவும், வாகனங்களை சீர்படுத்தவும், ரோபோ டிராபிக்போலீஸ் உதவும் என கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு காட்சிக்கூடத்தில் உள்ள ரோபோ டிராபிக்போலீஸை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.