ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழில் பொங்கல் வாழ்த்து
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பொங்கல் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.
சென்னை
ஜனாதிபதி ராம் ர்=நாத் கோபிந்த் தமிழகம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு தமது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நமது மக்கள் குறிப்பாக உழவர்களின் கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியை கொண்டாடும் நல்ல தருணம் பொங்கல் விழா என்றும், இந்த இனியநாளில் வளமான செழிப்பும் நலமான வாழ்வும் அனைவரும் பெற்றிட வாழ்த்துவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தமிழகம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். நமது மக்கள் குறிப்பாக உழவர்களின் கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியை கொண்டாடும் நல்ல தருணம் பொங்கல் விழா. இனியநாளில் வளமான செழிப்பும் நலமான வாழ்வும் அனைவரும் பெற்றிட வாழ்த்துகின்றேன்
— President of India (@rashtrapatibhvn) January 15, 2019