ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலித்தோம் - ஸ்டாலின்

திமுக நடத்திய கூட்டத்தில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலித்தோம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-20 07:04 GMT
சென்னை,

சோழிங்கநல்லூர் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

ஒவ்வொரு மாநிலத்திலும் சூழல் வேறுபடுகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் பிரதமரை தேர்வு செய்யலாம் என மேற்கு வங்கத்தில் எண்ணுகிறார்கள். ஆகையால் நான் மேற்கு வங்கத்தில் இது குறித்து பேசவில்லை, இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

சென்னையில் திமுக நடத்திய கூட்டத்தில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலித்தோம். 
தலைமைச்செயலகத்தில் துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் எதற்காக யாகம் நடத்தினார் என தெரியவில்லை. இது குறித்து  ஓ பன்னீர் செல்வம் பதிலளிக்கவேண்டும். 

கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் மீது குற்றச்சாட்டு வைத்த மேத்யூவிடம் விசாரித்திருக்க வேண்டும். பாஜகவிற்கு எடுபிடியாக இருக்க மாட்டோம் என தம்பிதுரை கூறியது இதற்குமுன் எடுபிடியாக இருந்தாக அர்த்தமா? என  மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்