மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா புதிய மனு தாக்கல் செய்துள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.
அதில் "மேகதாது அணை கட்ட கர்நாடகா சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும். காவிரி தொடர்புடைய மாநிலங்களின் அனுமதியின்றி அணை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது" என கூறி உள்ளார்.